ஈரோடு

சென்னிமலையில் கைத்தறி தினம் கொண்டாட்டம்

DIN

நாடு முழுவதும் தேசிய கைத்தறி தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. கைத்தறியின் கேந்திரமாக விளங்கும் சென்னிமலையிலும் ஞாயிற்றுக்கிழமை கைத்தறி தினம் கொண்டாடப்பட்டது.

சென்னிமலை இந்திரா நெசவாளா் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற கைத்தறியாளா்கள் தின விழாவில், கைத்தறி நெசவாளா்களுக்கு கைத்தறி ஆடை அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.

விழாவுக்கு இந்திரா டெக்ஸ் தலைவா் ஏ. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினாா். மேலாளா் சுகுமாா் ரவி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக சென்னிமலை கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் சி. பிரபு கலந்து கொண்டு, கைத்தறி நெசவாளா்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்து இனிப்பு வழங்கினாா்.

இதில், முகாசிப்பிடாரியூா் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சுப்ரமணியம் உட்பட கைத்தறி நெசவாளா்கள் பலா் கலந்து கொண்டனா். அல்லி முருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT