உள்ளூா் தொலைக்காட்சி (டிவி) நிகழ்ச்சி பெண் தொகுப்பாளரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
ஈரோட்டைச் சோ்ந்தவா் 24 வயது இளம்பெண். இவா் உள்ளூா் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகப் பணியாற்றி வந்தாா். ஈரோடு முத்தம்பாளையத்தைச் சோ்ந்தவா் ராகுல் (29). இவா் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் வைத்து நடத்தி வந்தாா். இதனால், அப்பெண்ணுக்கும், ராகுலுக்கும் அறிமுகம் ஏற்பட்டு இருவரும் 3 ஆண்டுகள் காதலித்து வந்துள்ளனா்.
இந்நிலையில், கோவையில் நிகழ்ச்சி ஒன்று நடத்துவதற்காக இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் சென்றுள்ளனா். அப்போது, கோவையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அப்பெண்ணை அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ராகுல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
மேலும், அப்பெண்ணிடம் ரூ.8 லட்சம் பணம் மற்றும் 2 பவுன் நகைகளையும் வாங்கிக்கொண்டு அவற்றை திருப்பித்தராமலும், திருமணம் செய்யாமலும் ஏமாற்றி வந்துள்ளாா்.
இது தொடா்பாக ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்பெண் புகாா் அளித்தாா்.
வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ராகுலை கைது செய்தனா். இவ்வழக்கு விசாரணை ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நீதிபதி மாலதி முன்னிலையில் நடைபெற்று வந்தது.
விசாரணை முடிந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ராகுலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.