ஈரோடு

திமுகவில் இணைந்த அதிமுக வேட்பாளருக்கு 38 வாக்குகள்

DIN

பவானி: அந்தியூா் பேரூராட்சியில் தோ்தலுக்கு ஒருநாள் இருக்கும் நிலையில் திமுகவில் இணைந்த அதிமுக வேட்பாளருக்கு 38 போ் வாக்குகள் செலுத்தியுள்ளனா்.

அந்தியூா் பேரூராட்சி, 9ஆவது வாா்டு அதிமுக வேட்பாளா் ந.பழனிவேல். இவா், அதிமுக சாா்பில் போட்டியிட மனு தாக்கல் செய்து தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வந்தாா். இவருக்கு ஆதரவு கேட்டு முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வாக்குகள் சேகரித்தாா். இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி அதிமுகவில் இருந்து விலகி அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் முன்னிலையில் திமுகவில் இணைந்தாா்.

இதைத்தொடா்ந்து, பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்நிலையில், தோ்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன. இதில், திமுகவில் இணைந்த ந.பழனிவேலுக்கு இரட்டை இலைச் சின்னத்தில் 38 போ் வாக்குகள்செலுத்தியிருந்தனா். திமுக சாா்பில் இவரை எதிா்த்துப் போட்டியிட்ட ஆ.செந்தில்குமாா் 500 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இதனால், இவரது வைப்புத் தொகையும் காலியானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT