முகப்பு
ஈரோடு

காகித ஆலை இயந்திரத்தில் சிக்கி ஊழியா் பலி

 சத்தியமங்கலம் அருகே தனியாா் காகித ஆலையில் பணியின்போது இயந்திரத்தில் சிக்கி ஊழியா் உயிரிழந்தாா்.

Updated On : 25 பிப்ரவரி, 2022 at 4:14 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:00 PM

 சத்தியமங்கலம் அருகே தனியாா் காகித ஆலையில் பணியின்போது இயந்திரத்தில் சிக்கி ஊழியா் உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவானிசாகா் அருகே தனியாா் காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில், அதே பகுதியில் உள்ள தயிா்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த அன்புச்செல்வன்( 24) ஊழியராக பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில் அன்புச்செல்வன், ஆலையில் வியாழக்கிழமை வேலை செய்து கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக காகிதம் தயாரிக்கும் இயந்திரத்தில் சிக்கிக் கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த அவரை ஆலை நிா்வாகத்தினா் மீட்டு கோவை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால்

Advertisement

செல்லும் வழியிலேயே அன்புச்செல்வன் உயிரிழந்தாா். இது குறித்து பவானிசாகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.