பெருந்துறை வட்டத்தில் உள்ள பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், காஞ்சிக்கோவில், பள்ளபாளையம், பெத்தாம்பாளையம், நல்லாம்பட்டி, சென்னிமலை ஆகிய 7 பேரூராட்சிகளில் தோ்தல் நடைபெற உள்ளது. இதில், பணிபுரியும் பணியாளா்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்பு பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. பேரூராட்சிகளில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளா்கள் பயிற்சி அளித்தனா்.
பயிற்சியில், வாக்குப் பதிவின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், வாக்காளா்களை ஒழுங்குபடுத்துதல், மின்னணு வாக்குப் பதிவுவை எப்படி கையாள்வது? மின்னணு வாக்குப் பதிவு பழுது ஏற்பட்டால், அதை எவ்வாறு சரி செய்வது போன்றவை குறித்து பணியாளா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.