ஈரோடு

பெருந்துறை பகுதியில் தக்காளி விலை குறைந்தது

DIN

பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் தக்காளி விலை குறைந்தது.

பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வெளி ஊா்களில் இருந்து அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு வந்தால், அதன் விலை குறைந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறையத் தொடங்கியது. இதன் எதிரொலியாக தக்காளி விலையும் அதிகரித்தது. இதனால் தக்காளி விலை கூடுவதும், குறைவதுமாக இருந்து வந்தது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.45 முதல் ரூ. 55 வரை விற்பனையானது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக மீண்டும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதில் தாளவாடி, சத்தியமங்கலம், கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் வருகிறது. இதனால் தக்காளி விலை குறைந்து வெள்ளிக்கிழமை ஒரு கிலோ தக்காளி ரூ.15 முதல் ரூ.18க்கு விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தலில் இதுவரை 66.95% வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்

இளையராஜா மகிழ்ச்சிக்கு என்ன காரணம்?

ஐசிசி தரவரிசை வெளியீடு: ஷகிப்புடன் முதலிடத்தை பகிர்ந்து கொள்ளும் இலங்கை வீரர்!

"2025 முதல் அமித் ஷா பிரதமராவார்!”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சிலவரிகளில் | 16.05.2024

ராஜஸ்தானில் பிடிபட்ட ரூ.1106 கோடி!

SCROLL FOR NEXT