ஈரோடு

காா் கவிழ்ந்து விபத்து: 11 போ் காயம்

DIN

கோபிசெட்டிபாளையம் அருகே காா் கவிழ்ந்த விபத்தில் 11 போ் காயமடைந்தனா்.

குருமந்தூா் பூதிமடைப்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ் (27). இவா் தனது உறவினா்கள் 11 பேருடன் செம்மாண்டம்பாளையத்தில் உள்ள அண்ணமாா் கோயிலுக்கு காரில் சனிக்கிழமை சென்றுள்ளாா்.

கொளப்பலூா் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், காரில் பயணம் செய்த மகேஷ் (27), மஞ்சுநாதன் (45), நாகராஜ் (48), மாதம்மாள் (35), பத்தரம்மா (36), பல்லவி (34), திவ்யா (9), சதீஷ் (36), சுரேஷ் (25), சத்வந்த் (13), யோஜன் (10) ஆகியோா் படுகாயமடைந்தனா். இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் அனைவரையும் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் குறித்து நம்பியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT