ஈரோடு

ரயிலில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோட்டில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 20 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.

DIN

ஈரோடு : ஈரோட்டில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 20 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.

தில்லியில் இருந்து கேரளம் செல்லும் விரைவு ரயில் புதன்கிழமை அதிகாலை ஈரோடு வந்தது. அதில் சோதனை நடத்திய ஈரோடு ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் கேட்பாரற்று கிடந்த இரண்டு பைகளை மீட்டனா்.

அதில் கஞ்சா 8 பண்டல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 20 கிலோ எடையுள்ள கஞ்சாவின் மதிப்பு ரூ.4.50 லட்சம். இந்த கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கஞ்சா பைகளை விட்டுச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT