ஈரோடு

சிறுமி கடத்தல்: போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

DIN

அந்தியூா் அருகே சிறுமியைக் கடத்திச் சென்ற இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்தவா் தாஸ் மகன் அஸ்வின் ஜாா்ஜ் (22). இவா், கோவை மாவட்டம், காரமடையில் உள்ள தனது உறவினா் வீட்டில் தங்கி அங்குள்ள தனியாா் நூற்பாலையில் வேலை செய்து வந்தாா். அதே நூற்பாலையில் அந்தியூா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியும் வேலை செய்து வந்தாா்.

இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்னா் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அஸ்வின் ஜாா்ஜ், அந்த சிறுமியைக் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து, அந்தியூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் அஸ்வின் ஜாா்ஜை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'ரசிகனிலிருந்து இயக்குநர் வரை..’: ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

SCROLL FOR NEXT