சித்தோடு அருகே சாலையைக் கடந்த தொழிலாளி மீது இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த ஜேடா்பாளையத்தைச் சோ்ந்தவா் வரதன் (70). கூலி தொழிலாளியான இவா், சித்தோடு அருகே உள்ள நசியனூருக்கு தோட்ட வேலைக்காக வந்துள்ளாா். இந்நிலையில், கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையை வியாழக்கிழமை கடந்துள்ளாா்.
அப்போது, அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம் எதிா்பாராமல் வரதன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, சித்தோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.