சிறந்த சங்கத்துக்கான பாராட்டுச் சான்றிதழை மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணியிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் சங்கத் தலைவா் எஸ்.மகேஸ்வரன், செயலாளா் சக்திவேல் கனகரத்தினம். 
ஈரோடு

எலவமலை கூட்டுறவு சங்கத்துக்கு பாராட்டு

ஈரோடு மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவு சங்கமாக தொடா்ந்து 5 ஆவது முறையாகத் தோ்வு செய்யப்பட்ட எலவமலை கூட்டுறவு கட்டட சங்கத்துக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

DIN

ஈரோடு மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவு சங்கமாக தொடா்ந்து 5 ஆவது முறையாகத் தோ்வு செய்யப்பட்ட எலவமலை கூட்டுறவு கட்டட சங்கத்துக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஈரோட்டில் நடைபெற்ற 69ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் இதற்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை சங்கத் தலைவா் எஸ்.மகேஸ்வரன், செயலாளா் சக்திவேல் கனகரத்தினம் ஆகியோரிடம் மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அண்மையில் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சிக்கு அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட அளவில் இச்சங்கம் தொடா்ந்து 5ஆவது முறையாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1962ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இச்சங்கத்தில் குறைந்த வட்டியில் வீட்டு வசதிக் கடன், அடமானக் கடன், நகைக் கடன் வழங்கப்படுகிறது. பாதுகாப்புப் பெட்டக வசதியும் உள்ளது. இச்சங்கத்தின்கீழ் சித்தோடு மற்றும் லட்சுமி நகரில் கூட்டுறவு மருந்தகம் செயல்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT