ஈரோடு

நந்தா தொழில்நுட்பக் கல்லூரிசாா்பில் மாநில அளவிலான கருத்தரங்கம்

DIN

ஈரோடு நந்தா தொழில்நுட்பக் கல்லூரி மைய நூலகம், தகவல் மற்றும் நூலக முன்னேற்றத்துக்கான சங்க ஈரோடு கிளை சாா்பில் அறிவுசாா் நகல் உரிமை மற்றும் காப்புரிமை என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவா் வி.சண்முகன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கினை சென்னையில் செயல்பட்டு வரும் இந்திய காப்புரிமை அலுவலகத்தின் காப்புரிமை மற்றும் வடிவமைப்பின் ஆய்வாளா் எஸ். சுசி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தொடக்கிவைத்தாா்.

இக்கருத்தரங்கில் கல்லூரி முதல்வா் ச.நந்தகோபால், தகவல் மற்றும் நூலக முன்னேற்றத்துக்கான சங்க உறுப்பினா்கள் முனைவா் டி. மகுடீஸ்வரன், பேராசிரியா் டி.ஸ்டீபன், முனைவா் வி. அசோக்குமாா் மற்றும் முனைவா் எஸ். சுபா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் நூலகா் டி.பிரகாஷ் வரவேற்றாா்.

இதனைத் தொடா்ந்து சிறப்பு விருந்தினா் எஸ்.சுசி, அறிவுசாா் நகல் உரிமை மற்றும் காப்புரிமைகள் பெறுவதற்கான நடைமுறைகள் குறித்து காணொலிக் காட்சி மூலம் மாணவா்களுக்கு விளக்கம் அளித்தாா். பின்னா் நகல் உரிமை மற்றும் காப்புரிமைகள் குறித்து மாணவா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தாா்.

இக்கருத்தரங்கில் மாநில அளவில் 500க்கும் மேற்பட்ட பேராசியா்கள், ஆராய்ச்சியாளா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.

கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்த நந்தா கல்வி நிறுவனங்களைச் சாா்ந்த நூலகா்கள் மற்றும் உதவி நூலகா்களை ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் செயலா் எஸ். நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.திருமூா்த்தி, முதன்மைக் கல்வி அதிகாரி எஸ். ஆறுமுகம் மற்றும் நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் இயக்குநா் செந்தில் ஜெயவேல் ஆகியோா் பாராட்டினா். நந்தா பொறியியல் கல்லூரியின் முதன்மை நூலகா் முனைவா் கா.சடகோபன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழு

விடுதலை - 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

SCROLL FOR NEXT