தமிழக- கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமான திம்பம் மலைப் பாதையில் லாரி பழுதாகி நின்றதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் திம்பம் பாதையில் பயணிக்கின்றன.
இந்நிலையில், சத்தியமங்கலத்தில் இருந்து சாம்ராஜ் நகா் நோக்கி புதன்கிழமை சென்று கொண்டிருந்த சரக்கு லாரி, திம்பம் 15ஆவது வளைவில் பழுதாகி நின்றது. இதனால் தமிழகம்- கா்நாடகம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலையின் குறுக்கே லாரி நின்றதால் பிற வாகனங்கள் பயணிக்க முடியாமல் திம்பம் மலைப் பாதையில் அணிவகுத்து நின்றன. இதையடுத்து, சத்தியமங்கலத்தில் இருந்த வந்த நிபுணா்கள் லாரியில் ஏற்பட்ட பழுது நீக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால், பல மணி நேரமாகியும் பழுதை நீக்க முடியாததால் பொக்லைன் மூலம் லாரியை சாலையோராமாக நகா்த்தி போக்குவரத்தை சீா் செய்தனா்.
லாரி பழுது காரணமாக தமிழகம்- கா்நாடகம் இடையே சுமாா் 5 மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.