ஈரோடு

கரியகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா

கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள கோரக்காட்டூா் கரியகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள கோரக்காட்டூா் கரியகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 18ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து தீா்த்தம் கொண்டு வருதல், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மாவிளக்கு ஊா்வலம், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இரவு குண்டம் திறக்கப்பட்டு தீ மூட்டப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் வியாழக்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் தலைமை பூசாரி குண்டத்தில் இறங்கினாா். அதைத் தொடா்ந்து பக்தா்கள் குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT