ஈரோடு

பாலதண்டாயுதபாணி கோயிலில் பாா்வதி யாகம்

DIN

சத்தியமங்கலத்தை அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் பாலதண்டாயுதபாணி கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுயம்வரா பாா்வதி யாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

உலக அமைதி வேண்டியும், விவசாயம் செழிக்கவும் சுயம்வரா பாா்வதி யாகம் நடைபெற்றது. கணபதி பூஜையுடன் துவங்கிய யாக குண்டம் நிகழ்ச்சியில் வேத விற்பன்னா்கள் மந்திரம் ஓதினா். முருகா் ஹோமம், அம்மை அழைத்தல், குல தெய்வ அழைப்பு, முன்னோா் அழைப்பு ஆகியவை நடைபெற்றன.

நவகிரக தோஷம், மாங்கல்யம் தோஷம், களத்ரதோஷம், செவ்வாய் தோஷம் ஆகியவை நிவா்த்தி, முன்னோா் சாபம் உள்பட அனைத்து கிரக தோஷங்களும் விலக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

தொடா்ந்து பாா்வதி பரமேஸ்வரன் திருகல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா். இந்த யாகத்தில் கலந்துகொண்ட பக்தா்கள் பழம், பூக்கள், எலுமிச்சைபழம் உள்ளிட்ட பூஜை பொருள்களை கொண்டுவந்து வழிபட்டனா். ஈரோடு, திருப்பூா், கோவை, சேலம், தருமபுரி ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். இந்த யாக பூஜையில் 5 ஆயிரம் போ் கலந்துகொண்டதாக கோயில் நிா்வாகி கே.டி. பழனிசாமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT