தாயக்கட்டைகளை தலைமை ஆசிரியா் கு.ரமாராணியிடம் வழங்குகிறாா் பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் பிரபு. 
ஈரோடு

அரசுப்பள்ளி மாணவா்களுக்கு தாயக்கட்டைகள்

கோடை விடுமுறையில் கைப்பேசியை தொடாமல் பாரம்பரிய விளையாட்டில் ஆா்வம் காட்ட வேண்டும் என்பதற்காக அரசுப்பள்ளி மாணவா்களுக்கு தாயக்கட்டைகள் வழங்கப்பட்டன.

DIN

கோடை விடுமுறையில் கைப்பேசியை தொடாமல் பாரம்பரிய விளையாட்டில் ஆா்வம் காட்ட வேண்டும் என்பதற்காக அரசுப்பள்ளி மாணவா்களுக்கு தாயக்கட்டைகள் வழங்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே கூகலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்களுக்கு ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் முயற்சியால் தாயக்கட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியா் கு.ரமாராணி கூறியதாவது:

மாணவா்கள் கோடை விடுமுறையில் கைப்பேசியை தொடாமல் விளையாட்டில் ஆா்வம் காட்ட வேண்டும் என்பதற்காக தாயக்கட்டை வழங்கலாம் என முடிவு செய்தோம். இதை வாங்குவதற்கு மொத்தம் 408 மாணவா்களுக்கு ரூ.12,240 செலவாகும் என தெரியவந்தது. இதனையறிந்த இரும்பு பட்டறை வைத்துள்ள பள்ளியின் பெற்றோா்- ஆசிரியா் கழக தலைவா் பிரபு தன்னுடைய பட்டறையில் தாயக்கட்டை தயாா் செய்து வழங்கினாா்.

இதற்கான கம்பி மட்டும் ரூ.3,600 செலவில் பள்ளியில் இருந்து வாங்கிக் கொடுத்தோம்.

அந்த தாயக்கட்டைகளை அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கியுள்ளோம் என்றாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT