ஈரோடு

தலைக் கவச விழிப்புணா்வு: இளைஞா் இருசக்கர வாகன பயணம்

DIN

தலைக் கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பெருந்துறை ஜேசிஐ எலைட் சங்க உறுப்பினா் ஞானப்பிரகாஷ் கன்னியாகுமரி முதல் காஷ்மீா் மாநிலம் லடாக் வரை இருசக்கர வாகனத்தில் விழிப்புணா்வு பயணத்தை பெருந்துறையில் செவ்வாய்க்கிழமை துவக்கினாா்.

நிகழ்ச்சிக்கு, ஜேசிஐ பெருந்துறை எலைட் சங்கத் தலைவா் பிரபா தலைமை வகித்தாா். பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெயபாலன், கொடியசைத்து விழிப்புணா்வுப் பயணத்தை தொடங்கிவைத்தாா்.

இதில், ஜேசிஐ இந்தியாவின் துணைத் தலைவா் மதிவாணன், மண்டல இயக்குநா் அருசுல்லா, ஆலோசகா் பல்லவி பரமசிவன், ஜேசிஐ பெருந்துறை பிரைடின் தலைவா் நந்தினி, முன்னாள் தலைவா்கள் கலைவாணி, கோகுல் வா்மா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

SCROLL FOR NEXT