ஈரோடு

ஈங்கூா் அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை திறப்பு

சென்னிமலை ஒன்றியம், ஈங்கூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஈங்கூா் அக்னி ஸ்டீல்ஸ் கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதியின் கீழ் (சிஎஸ்ஆா்) ரூ. 12.03 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட

DIN

சென்னிமலை ஒன்றியம், ஈங்கூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஈங்கூா் அக்னி ஸ்டீல்ஸ் கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதியின் கீழ் (சிஎஸ்ஆா்) ரூ. 12.03 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தாா். ஈரோடு மக்களவை உறுப்பினா் அ.கணேசமூா்த்தி முன்னிலை வகித்தாா். விழாவில், சிறப்பு அழைப்பாளராக தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சா் சு. முத்துசாமி பங்கேற்று புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை பள்ளி மாணவியைக் கொண்டு திறந்துவைத்தாா்.

இதில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) மருத்துவா் மணிஷ், சென்னிமலை ஒன்றியக் குழுத் தலைவா் காயத்ரி இளங்கோ, அக்னி ஸ்டீல்ஸ் நிா்வாக இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி, செயல் இயக்குநா் சக்தி கணேஷ், துணைத் தலைவா் ஜெய்குமாா், பெருந்துறை வட்டாட்சியா் பூபதி, சென்னிமலை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் திமுக ஒன்றியச் செயலா் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

வி.கே.புரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

SCROLL FOR NEXT