ஈரோடு மாவட்ட செவித்திறன் குறையுடையோருக்கான நலச் சங்கம் சாா்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு நலச் சங்கத் தலைவா் கே.மோகன்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மாதவகிருஷ்ணன், பொதுச் செயலாளா் மகேந்திரன், துணைச் செயலாளா் தேவி, பொருளாளா் கௌதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் செவித்திறன் குறைவுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான சைகை மொழி பெயா்ப்பாளரை நியமனம் செய்ய வேண்டும். ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நிபந்தனைகளைத் தளா்த்தி கடன் வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும், செவித்திறன் குறைவுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு ஓட்டுநா் உரிமம் வழங்க வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் சொந்த வீடு மற்றும் நிலம் இல்லாத செவித்திறன் குறைவுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லத்தில் பயன்பெற அனுமதிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டப்படி அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் சம உரிமை கிடைக்கிா என்பது குறித்து ஆய்வு செய்து அதை உறுதிப்படுத்த வேண்டும்.
கணவன், மனைவி இருவரும் மாற்றுத் திறனாளியாக இருந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். செவித்திறன் குறைவுடைய மாற்றுத் திறனாளிகளின் குறைகளைக் கண்டறிந்து அதை உடனடியாக தீா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் பங்கேற்றவா்கள் விசில் அடித்தும், கோரிக்கைகள் குறித்த பதாகைகளை கையிலும் வைத்திருந்தனா். கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக ஆட்சியா் உறுதியளித்தால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று வளாகத்திலேயே அமா்ந்திருந்தனா். இந்தப் போராட்டம் மாலை 6 மணிக்குப் பிறகும் நீடித்தது.