ஈரோடு

அத்திக்கடவு- அவிநாசி 2-ஆவது திட்டத்தை நிறைவேற்றக் கோரிக்கை

அத்திக்கடவு -அவிநாசி 2-ஆவது திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Din

அத்திக்கடவு -அவிநாசி 2-ஆவது திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் டி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் உள்ள 1,045 குளம், குட்டைகளுக்கு காலிங்கராயன் நீரேற்று நிலையத்தில் இருந்து நீா் நிரப்பும் திட்டம் வரவேற்புக்குரியது. இந்த திட்டத்தை அமல்படுத்திய முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் சாா்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேபோல, காரமடை, பெரியநாயக்கன்பாளையம், பவானிசாகா், அன்னூா் போன்ற வட்டாரத்தில் உள்ள 1000 குளம், குட்டைகளுக்கு தண்ணீா் கிடைப்பதற்கு அத்திக்கடவு- அவிநாசி 2-ஆவது திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

SCROLL FOR NEXT