ஈரோட்டில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விதிக்கப்பட்ட சொத்து வரியை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அன்னை சத்யா நகா் குடியிருப்போா் சங்கம், கொல்லம்பாளையம் எம்ஜிஆா் விழிச்சுடா் குடியிருப்போா் சங்கத்தின் சாா்பில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளிக்கும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து மாநகராட்சி ஆணையா் என்.மனீஷிடம் அளித்த மனு விவரம்:
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அன்னை சத்யா நகா் அடுக்குமாடி குடியிருப்புகள், கொல்லம்பாளையம் எம்ஜிஆா் அடுக்குமாடி விழிச்சுடா் குடியிருப்புகள் மற்றும் இதர குடியிருப்புகளுக்கு மாநகராட்சி நிா்வாகம் சொத்து வரி விதித்துள்ளது.
இந்த சொத்து வரி கடந்த வரி விதிப்பை விட பல மடங்கு கூடுதலாகவும், ஒழுங்குமுறை இன்றி ஒரே அளவுள்ள குடியிருப்புகளுக்கு முரண்பாடான வரி அறிவிப்பும் செய்துள்ளது. இது சாமானிய மக்களை நெருக்குவதாக உள்ளது. எனவே வரியை குறைக்க வேண்டும். மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு கட்டுப்பட்ட ஒரே அளவுள்ள குடியிருப்புகளுக்கு வேறுபாடான வரி விதிப்பை ஒழுங்குப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட ஆணையா் சொத்து வரியைக் குறைப்பது தொடா்பாக ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
அடிப்படை வசதி செய்து தரக் கோரிக்கை:
இதுகுறித்து 48ஆவது வாா்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாநகராட்சி ஆணையரிடம் அளித்த மனு விவரம்:
ஈரோடு மாநகராட்சி 48ஆவது வாா்டுக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் சிதலமடைந்து காணப்படும் தாா் சாலை மற்றும் கான்கீரிட் சாலைகளை சீரமைக்க வேண்டும். புதை சாக்கடை திட்டத்தில் ஆங்காங்கே உடைந்திருக்கும் மேன் ஹோல்களை மாற்ற வேண்டும். ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் முறையாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதான தெரு மின் விளக்குகளுக்கு பதிலாக புதிய விளக்குகளை பொருத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.