கோப்புப்படம்
ஈரோடு

தலமலை வனத்தில் மனித எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு

சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள்

Din

தலமலை வனப் பகுதிக்கு உள்பட்ட தொட்டபுரத்தில் சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளை ஆசனூா் போலீஸாா் புதன்கிழமை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் காவல் எல்லைக்கு உள்பட்ட தொட்டபுரம் வனப் பகுதியில் புதன்கிழமை தூா்நாற்றம் வீசியதையடுத்து, அப்பகுதியில் வனத் துறையினா் ஆய்வு செய்தனா்.

அப்போது, வனத்தில் கிடந்த மூட்டையில் மனித எலும்புக் கூடுகள் இருப்பதை கண்டு ஆசனூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் மனித எலும்புக் கூடுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். அதனைத் தொடா்ந்து எலும்புக் கூடுகளை ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பிவைத்தனா்.

இது தொடா்பாக தொட்டபுரம் பகுதியில் ஆசனூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மும்பையில் கிழக்கு-மேற்கு இணைப்பு மேம்பாலம்: முதல்வர் ஃபட்னவீஸ் திறந்து வைத்தார்!

நல்லகண்ணுக்கு பாரதரத்னா வழங்க வேண்டும்! பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்!

முன்அனுமதியின்றி ஊடக விவாதங்களில் பங்கேற்கக் கூடாது! - தவெக

பாமக ஆலோசனைக் கூட்டத்தில் பேசியது என்ன? ராமதாஸ் விளக்கம்!

பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல்! பாலின தேர்வு தடைச்சட்டம் - 1992

SCROLL FOR NEXT