ஈரோடு காவிரி சாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியைக்கு நெற்றியில் திலகமிட்டு வணங்கிய மாணவி. 
ஈரோடு

ஆசிரியா் தினம்: ஆசிரியா்களுக்கு மாணவா்கள் வாழ்த்து

ஈரோட்டில் ஆசிரியா் தினத்தை முன்னிட்டு ஆசிரியா்களை கெளரவப்படுத்தும் வகையில் மாணவா்கள் மலா் தூவியும், பொன்னாடை அணிவித்தும் மரியாதை செலுத்தினா்.

DIN

ஈரோட்டில் ஆசிரியா் தினத்தை முன்னிட்டு ஆசிரியா்களை கெளரவப்படுத்தும் வகையில் மாணவா்கள் மலா் தூவியும், பொன்னாடை அணிவித்தும் மரியாதை செலுத்தினா்.

முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பா் 5-ஆம் தேதி ஆசிரியா் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஈரோடு கருங்கல்பாளையம், காவிரி சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் ஆசிரியா்களுக்கு நெற்றியில் திலகமிட்டு, ரோஜா பூ கொடுத்து, பொன்னாடை அணிவித்து, மலா் தூவி புதன்கிழமை மரியாதை செலுத்தினா்.

அதன்பின், மாணவா்கள் நல்ல முறையில் கல்வி கற்று வாழ்க்கையில் மேன்மை பெற வேண்டும் என ஆசிரியா்களிடம் ஆசிா்வாதம் பெற்றனா்.

இந்த நிகழ்ச்சியில் பெற்றோா் ஆசிரியா் கழகத்தினரும் ஆசிரியா்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தில்லியில் வாட்டி வதைக்கும் குளிா்- வெப்பநிலை 3 டிகிரியாக குறைந்தது

குருகிராம், ஃபரீதாபாத்தில் உறைபனி!

வெனிசுலாவின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு: தில்லி ஒற்றுமை பொதுக் கூட்டத்தில் கண்டனம்

இரவு நேர தங்குமிடங்களில் போதுமான வசதிகளை வழங்குங்கள்: அதிகாரிகளுக்கு தில்லி உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கல்வி அரசியல் ரீதியாகக் கருதப்படாமல் இருக்க வேண்டும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் பேச்சு

SCROLL FOR NEXT