ஈரோடு

கிராவல் மண் கடத்தல்: டிப்பா் லாரி பறிமுதல்

அந்தியூா் அருகே கிராவல் மண் கடத்திச் சென்ற டிப்பா் லாரியை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

Syndication

பவானி: அந்தியூா் அருகே கிராவல் மண் கடத்திச் சென்ற டிப்பா் லாரியை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

அந்தியூா் - அத்தாணி சாலையில் தாசலியூா் பிரிவு அருகே போலீஸாா் வாகனச் சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்தியூரில் இருந்து வந்த டிப்பா் லாரியை நிறுத்தினா். லாரி ஓட்டுநா் திடீரென கீழே குதித்து தப்பினாா். சந்தேகமடைந்த போலீஸாா் லாரியில் சோதனை மேற்கொண்டபோது, கிராவல் மண் கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், தப்பியோடிய ஓட்டுநரையும், லாரி உரிமையாளரையும் தேடி வருகின்றனா்.

தில்லி காற்றின் தரம் சற்று முன்னேற்றம்!

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

SCROLL FOR NEXT