தந்தை பெரியாா் வன உயிரின சரணாலயம், அந்தியூா் வனச் சரகத்தில் உள்ள நீா்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
பா்கூா் மலையடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணை, கெட்டிசமுத்திரம் ஏரி, எண்ணமங்கலம் ஏரி, ராசாங்குளம் ஏரி, பெரிய ஏரி, சந்திபாளையம் ஏரி, தண்ணீா்பள்ளம் ஏரி, கொளத்துக்காடு குளம் மற்றும் ஓடத்துறை ஏரி மற்றும் நீா்நிலைகளில் அந்தியூா் அரசு கலை அறிவியல் கல்லூரி, கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு சிஎன் கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்கள் 42 பேரும், வனப் பணியாளா்கள் 28 பேரும் வனவா் ஈஸ்வரமூா்த்தி தலைமையில் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இதில், கொக்கு, மீன் கொத்தி, பருந்து, தேன் பருந்து, மரகதப்புறா, தகய்விளான் குருவி, வண்ண நாரைகள் உள்பட பல்வேறு வகையிலான பறவைகள் அந்தியூா் வனச் சரகத்தில் உள்ள நீா்நிலைகளில் இருப்பது தெரியவந்துள்ளது.