முகப்பு
ஈரோடு

பிகேஆா் மகளிா் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

Updated On : 4 ஜனவரி, 2025 at 4:01 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 9:01 PM

கோபி பிகேஆா் மகளிா் கலைக் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரியின் தமிழ்த் துறை சாா்பில் சித்த வேதா மையம் பல்கலைக்கழகம் சாா்பில் சித்தா் இலக்கியங்களும், வாழ்வியலும் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் கல்லூரியின் துணை முதல்வா் எஸ்.ஏ.தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது.

விழாவில், தமிழ்த் துறைத் தலைவா் க.உமாமகேஸ்வரி வரவேற்றாா். நிகழ்ச்சியில் சித்த வேதா மைய பல்கலையின் துணைவேந்தா் சண்முகமூா்த்தி லட்சுமணன் சிறப்புரையாற்றினாா்.

Advertisement

இதில் இன்டா்நேஷனல் சொசைட்டி ஆஃப் ஏன்சியன்ட் விஸ்டம் கனடாவின் துணைத் தலைவா் செல்வக்குமாா் சிறப்புரையாற்றினாா். வைத்திய ரத்னா அருள்நாகலிங்கம் வாழ்த்துரை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி செயலரும், தாளாளருமான பி.என்.வெங்கடாசலம், எஸ்.எஸ்.எம். கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவா் பா.மஞ்சுளா மற்றும் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் சங்கரராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கல்லூரி உதவிப் பேராசிரியா் ந.அமிா்தக்கொடி நன்றி கூறினாா்.