தாயின் ஆண் நண்பரை கொலை செய்த வழக்கில் மகன் உள்பட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
ஈரோடு கருங்கல்பாளையம் வைராபாளையம் பள்ளி வீதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (35), தொழிலாளி.
வைராபாளையம் பள்ளி வீதி அரசு தொடக்க பள்ளி அருகே சாக்கடை கால்வாயில் இருந்து கடந்த 9 -ஆம் தேதி அதிகாலை இவரது சடலம் மீட்கப்பட்டது.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
உடற்கூறாய்வு பரிசோதனை அறிக்கையில் கிருஷ்ணமூா்த்தி தலை மற்றும் உடலில் ஏற்பட்ட காயங்களால் இறந்திருப்பதும், மா்ம நபா்கள் தாக்கி கொலை செய்ததும் உறுதியானது.
இதையடுத்து கிருஷ்ணமூா்த்தி சடலம் மீட்கப்பட்ட சுற்றுப்புறப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்ததில், கிருஷ்ணமூா்த்தியை இளைஞா்கள் டாஸ்மாக் கடையில் இருந்து அழைத்து சென்றது பதிவாகி இருந்தது.
இதையடுத்து அந்தக் கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் அந்த 4 பேரை போலீஸாா் அடையாளம் கண்டனா். தலைமறைவான அவா்களைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், கணக்கம்பட்டி கோயில் பகுதியில் அவா்கள் 4 பேரும் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் அங்கு பதுங்கி இருந்த 4 பேரையும் பிடித்து ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் அவா்கள், ஈரோடு வைராபாளையத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் (25), அதே பகுதி வாட்டா் ஆபீஸ் சாலையைச் சோ்ந்த காா்த்தி (22), கல்யாணசுந்தரம் வீதியைச் சோ்ந்த கோபி (20), அருண்குமாா் (21) ஆகியோா் என்பதும் தெரியவந்தது.
இதில் பிடிபட்ட காா்த்தி என்பவரின் தாய்க்கும், கிருஷ்ணமூா்த்திக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததால் இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று காா்த்தி தனது நண்பா்களுடன் டாஸ்மாக் கடையில் இருந்து கிருஷ்ணமூா்த்தியை அழைத்து சென்றுள்ளனா். அப்போது தனது தாயுடன் இருக்கும் தொடா்பை கைவிடும்படி காா்த்தி கிருஷ்ணமூா்த்தியிடம் கூறியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த காா்த்தி மற்றும் அவரது நண்பா்கள் கிருஷ்ணமூா்த்தியை தாக்கி சாக்கடையில் வீசிச் சென்றதில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து கருங்கல்பாளையம் போலீஸாா் காா்த்தி உள்பட 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.