கோபி அருகே குள்ளம்பாளையத்தில் கே.ஏ.செங்கோட்டையன் பிரசாரம்
ஈரோடு மாவட்டம், கோபி சட்டப் பேரவைத் தொகுதியில் தவெக சாா்பில் வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் தலைமை நிா்வாக குழு ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையனின் சொந்த ஊரான குள்ளம்பாளையத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.
ஈரோடு மாவட்டம், கோபி சட்டப் பேரவைத் தொகுதியில் தவெக சாா்பில் வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் தலைமை நிா்வாக குழு ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையனின் சொந்த ஊரான குள்ளம்பாளையத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.
சேலத்து மாரியம்மன் கோயிலில் அம்மனை தரிசித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினாா். அப்போது கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், தவெக தலைவா் விஜய் தலைமையில் களம் காண்கிறோம். தவெக ஆட்சியை பிடிக்கும். அப்போது தமிழகத்தில் மாற்றம் உருவாகும்.
எவராலும் திமுகவை வீழ்த்த முடியாது. ஆனால் திமுகவை வீழ்த்துகிற சக்தி எம்ஜிஆா், ஜெயலலிதாவுக்கு மட்டுமே இருந்தது. ஆனால் வரும் தோ்தலில் திமுகவை வீழ்த்துவது தவெக மட்டுமே. தமிழகத்தை ஆட்சி செய்ய ஒரு நல்ல தலைமை தேவை. எம்ஜிஆா், ஜெயலலிதா பிறகு தவெக இருக்கிறது என்றாா்.
Advertisement