முகப்பு
ஈரோடு

தாளவாடி அருகே கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை

Updated On : 6 ஏப்ரல் 2026, 1:59 am IST
ஆனந்தபுரம் கிராமத்துக்குள் சுற்றித்திரிந்த யானை.
பகிர்:

தாளவாடியை அடுத்த ஆனந்தபுரம் கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை பகல் காட்டு யானை நுழைந்ததால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.

கோடைக் காலம் தொடங்கியதையடுத்து, சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிகளில் உலவுவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தாளவடி மலைப் பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, ஆனந்தபுரம் கிராமத்துக்குள் நுழைந்தது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்து, வீடுகளிலேயே முடங்கினா். இது குறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் சுமாா் 1 மணி நேரம் போராடி யானையை வனத்துக்குள் விரட்டினா்.