ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான அரசு சொத்துகளை மீட்டுள்ளேன்! - பெருந்துறை திமுக வேட்பாளா்
பெருந்துறையில் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான அரசு சொத்துகளை மீட்டுள்ளேன் என்று திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் கூறினாா்.
பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்குள்பட்ட பெத்தாம்பாளையம் பிரிவு விநாயகா் கோயிலில் தரிசனம் மேற்கொண்டு, திருவேங்கிடம்பாளையம்புதூா், சீலம்பட்டி, சமாதானபுரம், சிலேட்டா் நகா், அண்ணா சிலை, திருவேங்கிடம்பாளையம், க.செ.பாளையம், பாலன் நகா், தீத்தம்பாளையம், எல்லப்பாளையம், கந்தாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.
அப்போது, அவா் பேசுகையில், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி மக்களின் தாகம் தீா்க்க கொடிவேரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை கொண்டு வர முழு முயற்சி செய்தேன்.
Advertisement
பெருந்துறையில் தனியாரிடம் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான அரசு சொத்துகளை மீட்டு பெருந்துறை நகராட்சி அலுவலகம், காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகம், அரசு பாலிடெக்னிக் கல்லூரி, மஞ்சள் வணிக வளாகம் ஆகியவற்றை அமைத்துக் கொடுத்தேன் என்றாா்.
மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் மகளிா் உரிமைத் தொகை, முதியோா் உதவித் தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். வீட்டு உபயோக பொருள்கள் வாங்க ரூ.8ஆயிரம் மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட திமுக தோ்தல் அறிக்கையை மக்களிடம் விளக்கினாா்.