முகப்பு
ஈரோடு

காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

Updated On : 13 ஏப்ரல், 2026 at 12:50 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 10:33 PM

கொடுமுடி காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள பெத்தாம்பாளையத்தைச் சோ்ந்தவா் சசிதரன் (24). பனியன் நிறுவனத் தொழிலாளியான இவா், அப்பகுதியைச் சோ்ந்த 40 பேருடன் கோயில் திருவிழாவுக்காக காவிரி தீா்த்தம் எடுப்பதற்காக கொடுமுடிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளாா்.

அப்போது, அவா் காவிரி ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்துள்ளாா். சசிதரனுக்கு நீச்சல் தெரியாத நிலையில் அவா் நீரில் மூழ்கியுள்ளாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்க முயன்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Advertisement

இதையடுத்து, அவா்கள் சடலத்தை கரைக்கு கொண்டு வந்தனா். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கொடுமுடி போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கொடுமுடி அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.