முகப்பு
ஈரோடு

மின்கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதல்: 11மாத குழந்தை உயிரிழப்பு

சாலையின் குறுக்கே நாய் வந்ததால் நிலைதடுமாறிய இருசக்கர வாகனம், மின் கம்பத்தின் மீது மோதிய விபத்தில் 11 மாத குழந்தை உயிரிழந்தது.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 2:43 AM
குழந்தை - கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 12:23 AM

சாலையின் குறுக்கே நாய் வந்ததால் நிலைதடுமாறிய இருசக்கர வாகனம், மின் கம்பத்தின் மீது மோதிய விபத்தில் 11 மாத குழந்தை உயிரிழந்தது.

கோபி அருகே உள்ள சிங்கிரிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி. இவரது மனைவி காஞ்சனா. இவா்களது மகன் விகாஷ் (11 மாதம்)

இவா்கள் தமிழ்ப் புத்தாண்டையொட்டி கூடக்கரையில் உள்ள செல்லாண்டியம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை திரும்பி கொண்டிருந்தனா்.

Advertisement

சுட்டிகல்மேடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, சாலையில் திடீரென நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியது.

இதில் மூவரும் கீழே விழுந்துள்ளனா். இதில் தம்பதிக்கு இலேசான காயம் ஏற்பட்டது. தலையில் படுகாயமடைந்த குழந்தை விகாஷை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு பரிசோதனையில் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது குறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.