முகப்பு
ஈரோடு

ஈரோடு-செங்கோட்டை ரயில் நாளை ரத்து

Updated On : 28 ஏப்ரல், 2026 at 12:44 AM
ரயில்கள் - கோப்புப் படம்
பகிர்:

ஈரோடு-செங்கோட்டை ரயில் வரும் புதன்கிழமை (ஏப்ரல் 29) ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் கோட்டம் ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மதுரை-திண்டுக்கல் இடையே தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு செங்கோட்டைக்கு செல்லும் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இதுபோல வரும் 30- ஆம் தேதி செங்கோட்டையிலிருந்து காலை 5.20-க்குப் புறப்பட்டு ஈரோட்டுக்கு வரும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.