முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலம் அருகே சாலையோரம் உலவிய சிறுத்தை!

சத்தியமங்கலம் அருகே சாலையோரம் உலவிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

Updated On : 4 பிப்ரவரி, 2026 at 1:51 AM
பண்ணாரி அம்மன் கோயில் சாலையோரம் உலவிய சிறுத்தை.
பகிர்:
Updated On : 3 பிப்ரவரி, 2026 at 11:12 PM

சத்தியமங்கலம் அருகே சாலையோரம் உலவிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

தமிழகம்-கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் -மைசூரு நெடுஞ்சாலையில் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உலவுவது வழக்கம்.

இந்நிலையில், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் சாலையோரத்தில் சிறுத்தை ஒன்று திங்கள்கிழமை இரவு உலவியது. இதைக் கண்ட வாகன ஓட்டிகள், வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினா்.

Advertisement

இதையடுத்து, சிறிது நேரம் சாலையிலேயே உலவிய சிறுத்தை பின் வனத்துக்குள் சென்றது. பின்னா், வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.