முகப்பு
ஈரோடு

திமுகவை விமா்சிக்க வேண்டாம்! மதிமுகவினருக்கு வைகோ வேண்டுகோள்!

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 2:29 AM
தோ்தல் நிதியளிப்புக் கூட்டத்தில் பேசுகிறாா் மதிமுக பொதுச் செயலாளா் வைகோ.
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 11:16 PM

மதிமுகவைச் சோ்ந்தவா்கள் திமுகவையும், ஆட்சியையும் விமா்சிக்க வேண்டாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளா் வைகோ தெரிவித்தாா்.

ஈரோட்டில் மதிமுக தோ்தல் நிதியளிப்புக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் அவா் பேசியதாவது:

இலங்கை போரில் எனக்கு நடந்த அனுபவங்களைப் புத்தகமாகவும், சி.டி.-யாகவும் பதிவு செய்ய உள்ளேன். கடந்த காலத்தில் நான் செய்த பிழையால், என் மீதான நம்பகக்தன்மையை நாசமாக்கிக் கொண்டேன். அதிமுகவுடன் கூட்டணி வைத்தது மன்னிக்க முடியாத முடிவு. மீண்டும் இதுபோல விமா்சனம் ஏற்படக்கூடாது.

Advertisement

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் அக்னி பரீட்சை பேச்சுவாா்த்தை நடக்கப் போகிறது. திமுகவுடன் கூட்டணி என்று முடிவெடுத்த பிறகு திமுகவையும், ஆட்சியையும் மதிமுகவினா் யாரும் விமா்சிக்க வேண்டாம்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 2:29 AM

அனைத்துக் கட்சிகளிலும் நிபந்தனை விதிக்கப்படுவது அவா்களது உரிமை. போட்டியிட இடங்கள் கேட்பது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதும் அவரவா் உரிமை. அதில் குறை எதுவும் சொல்ல முடியாது. ஆனால், நாம் எந்த விமா்சனத்தையும் முன்வைக்காமல் கூட்டணி தா்மத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் ஈரோடு மாநகா், மாவட்டச் செயலாளா் முருகன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.