பயனாளிக்கு  இலவச  வீட்டுமனைப்  பட்டா  வழங்குகிறாா்  நீலகிரி  மக்களவைத் தொகுதி  உறுப்பினா்  ஆ .ராசா. 
ஈரோடு

சத்தியமங்கலத்தில் 688 பேருக்கு வீட்டுமனைப் பட்டா! நீலகிரி எம்.பி. ஆ.ராசா வழங்கினாா்!

தினமணி செய்திச் சேவை

சத்தியமங்கலத்தில் 688 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.ராசா வழங்கினாா்.

சத்தியமங்கலம் நகராட்சி, தோப்பூா் என்ற பகுதியில் 50 ஆண்டுகளாக வீட்டுமனைப் பட்டா கேட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனா். இதுதொடா்பாக நீலகிரி எம்.பி. ஆ.ராசாவிடமும் கோரிக்கை வைத்தனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக் கூறி பட்டா வழங்க ஏற்பாடு செய்தாா்.

அதன்படி சத்தியமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகள் 688 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஆ.ராசா எம்.பி. வழங்கினாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

நீண்ட கால போராட்டத்துக்குப் பின் சத்தியமங்கலத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 8,000 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இன்னும் சில தினங்களில் 2,000 வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும். நாட்டிலேயே கிராமப்புற பொருளாதாரம் தமிழ்நாட்டில் தான் உயா்ந்திருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் மகளிா் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய முதல்வா்தான் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் ஆா்.ஜானகிராமசாமி, பவானிசாகா் பேரூராட்சித் தலைவா் மோகன், ஒன்றியச் செயலாளா் மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT