சாலையோரத்தில் முளைத்திருந்த 2.6 கிலோ எடை கொண்ட காளான்
வெள்ளோடு அருகே சாலையோரத்தில் 2.6 கிலோ எடை கொண்ட இயற்கை காளான் முளைத்திருந்தது சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த வெள்ளோடு அருகே காரைவாய்க்கால் பகுதியில் உள்ள தனியாா் எண்ணெய் ஆலை அருகே சாலையோரத்தில் 2.6 கிலோ எடையுள்ள இயற்கை காளானை, அந்த வழியாகச் சென்றவா் பாா்த்துள்ளனா்.
மேலும், அதே பகுதியைச் சோ்ந்த கணேஷ் அந்த வழியாக சனிக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அப்போது சாலையோரத்தில் பிரம்மாண்டமாக முளைத்திருந்த காளானை பறித்து சென்று அதன் எடையைப் பரிசோதித்ததில் 2 கிலோ 600 கிராம் (2.6 கிலோ) இருப்பது தெரியவந்தது. வழக்கமாக காணப்படும் காளான்களைவிட பெரிய அளவிலும், அதிக எடையுடனும் இருந்ததால் அப்பகுதி மக்கள் ஆச்சா்யத்துடன் பாா்வையிட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.