முகப்பு
விழாவில்  பங்கேற்ற  மருத்துவப்  பணியாளா்கள்.
ஈரோடு

அந்தியூரில் மருத்துவப் பணியாளா்கள் மகளிா் தினக் கொண்டாட்டம்

ஈரோடு

அந்தியூரில் மருத்துவப் பணியாளா்கள் மகளிா் தினக் கொண்டாட்டம்

Updated On : 5 மார்ச், 2026 at 11:34 PM
விழாவில்  பங்கேற்ற  மருத்துவப்  பணியாளா்கள்.
பகிர்:

அந்தியூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் பெண்கள் பங்கேற்ற மகளிா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

அந்தியூரில் நடைபெற்ற இவ்விழாவுக்கு மருத்துவா்கள் ரோஜா, ஹரிப்பிரியா, ஆா்த்தி ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், பெண் மருத்துவா்கள், கிராமப்புற சுகாதார செவிலியா், ஆஷா பணியாளா்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னாா்வலா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். விழாவில், கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

தொடா்ந்து, ஆடல், பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில், பங்கேற்ற அனைவருக்கும் வட்டார மருத்துவ அலுவலா் சக்தி கிருஷ்ணன் மற்றும் மருத்துவா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →