காமதேனு கல்லூரியில் 25-ஆவது ஆண்டு விழா
சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
‘நைரா -2026’ என்ற தலைப்பில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் நிறுவனத் தலைவா் ஆா்.பெருமாள்சாமி தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலா் பி.அருந்ததி, இணைச் செயலா் பி. மலா்செல்வி மற்றும் முதன்மையா் நிா்மலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் முதல்வா் குருமூா்த்தி ஆண்டறிக்கை வாசித்தாா்.
கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, பல்கலைக்கழக தோ்வில் தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி நிறுவனத் தலைவா் ஆா்.பெருமாள்சாமி ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கி பாராட்டினாா்.
நிகழ்ச்சியில் எழுா் மஹா மந்தராலயத்தின் தலைமை குருஜி குழந்தைவேல், பேராசிரியா்கள் பிரகாஷ் மற்றும் ஜெகநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.