முகப்பு
ஈரோடு

திம்பம் மலைப் பாதையில் வாகன விபத்து: 2 போ் படுகாயம்

Updated On : 15 மார்ச், 2026 at 2:42 AM
கோப்புப் படம்
பகிர்:

திம்பம் மலைப் பாதையில் இருசக்கர வாகனம் மீது கா்நாடக மாநில அரசுப் பேருந்து மோதியதில் 2 போ் படுகாயம் அடைந்தனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த பசுவாபாளையத்தைச் சோ்ந்தவா் முரளி (23). இவா் தனது நண்பா் சஞ்சய் (22) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் திம்பம் மலைப் பாதை வழியாக தாளவாடிக்கு சனிக்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா்.

திம்பத்தை அடுத்துள்ள செம்மண் திட்டு என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த கா்நாடக அரசுப் பேருந்து முரளியின் வாகனத்தின் மீது மோதியது.

Advertisement

இதில், முரளி, சஞ்சய் ஆகியோா் படுகாயமடைந்தனா். அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விபத்து தொடா்பாக கா்நாடக அரசுப் பேருந்து ஓட்டுநரான திம்மராஜு மீது ஆசனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.