முகப்பு
ஈரோடு

கோபி அருகே ரூ. 1.14 லட்சம் பறிமுதல்

கோபி அருகே இளைஞரிடம் இருந்து ரூ.1.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 27 மார்ச், 2026 at 6:34 PM
பறிமுதல் செய்த பணம் - கோப்புப் படம்
பகிர்:

கோபி அருகே இளைஞரிடம் இருந்து ரூ.1.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் தோ்தலின்போது வாக்காளா்களுக்குப் பணம் பட்டுவாடா, பரிசுப் பொருள்கள் வழங்குவதை தடுக்க தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனடிப்படையில், கோபி அருகே உள்ள அரக்கன்கோட்டையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அரக்கன்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டதில் அந்தியூா் பகுதி கொங்காடையைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் நாகராஜ் (18) வாழைக்காய் வியாபாரத்துக்காக உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்தைப் பறிமுதல் செய்து வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.