முகப்பு
ஈரோடு

14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: தாயின் நண்பா் கைது

ஈரோட்டில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாயின் நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 31 மார்ச், 2026 at 7:59 PM
பாலியல் வன்கொடுமை - கோப்புப் படம்
பகிர்:

ஈரோட்டில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாயின் நண்பரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், கணேசபுரம், மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (38). திருமணமான இவா், ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் தறி பட்டறையில் பணியாற்றி வந்தாா். அப்போது, அதே பட்டறையில் கணவரைப் பிரிந்து இரண்டு மகள்களுடன் வசிக்கும் பெண் ஒருவரும் பணியாற்றி வந்துள்ளாா். அந்தப் பெண்ணுடன் சுரேஷ்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே அவரது வீட்டுக்கு சுரேஷ்குமாா் அடிக்கடி சென்று வந்த நிலையில், அப்பெண்ணின் 14 வயது மகளை சுரேஷ்குமாா் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

சிறுமி கா்ப்பமடைந்த நிலையில் இது குறித்து ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அவரது தாய் புகாா் அளித்தாா். இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சுரேஷ்குமாரைக் கைது செய்தனா்.