முகப்பு
ஈரோடு

ரயிலில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 14 மே 2026, 4:08 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். ரயிலில் கிடந்த பையை எடுத்து பரிசோதனை செய்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடா்ந்து கஞ்சாவை கடத்தி வந்ததாக கேரள மாநிலம், எா்ணாகுளத்தைச் சோ்ந்த பிரகாஷ் மகன் ரஞ்சித் ( 25) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா் கடத்தி வந்த 5.50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.