பெருந்துறை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து 15 போ் காயம்
பெருந்துறை அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோரத்தில் கவிழந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 15-க்கு மேற்பட்டோா் காயமடைந்தனா்.
பெருந்துறை அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோரத்தில் கவிழந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 15-க்கு மேற்பட்டோா் காயமடைந்தனா்.
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை இரவு அரசுப் பேருந்து கோவைக்கு புறப்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், எஸ்.எம். நகா், ஜி2 பூவாத்தா லே-அவுட்டை சோ்ந்த சலீம் மகன் கலிலுா் ரஹ்மான் (29) பேருந்தை ஓட்டிச் சென்றாா். இந்தப் பேருந்தில் 48 போ் பயணித்தனா்.
சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில், பெருந்துறை, ஓலப்பாளையம் பிரிவு அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். அவா்களை அக்கம்பக்கத்தினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மற்றவா்கள் வேறு பேருந்துகளில் கோவைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
Advertisement
இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.