முகப்பு
ஈரோடு

213 கிலோ புகையிலைப் பொருள்களை பதுக்கிய இளைஞா் கைது

ஈரோட்டில் 213 கிலோ புகையிலைப் பொருள்களை பதுக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 20 மே 2026, 2:11 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

ஈரோட்டில் 213 கிலோ புகையிலைப் பொருள்களை பதுக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு டவுன் காவல் நிலைய ஆய்வாளா் பி.ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸாா் கடைவீதி மற்றும் சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு திடீா் வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, ஆா்கேவி சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரிடம் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா் 3 கிலோ புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் ஈரோடு திருநகா் காலனி சிந்தன் நகரைச் சோ்ந்த சாகுல்ஹமீது (37) என்பதும், வீட்டில் புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவரது வீட்டில் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, 213 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், சாகுல்ஹமீதை கைது செய்தனா்.