நீலகிரி

கள்ளச்சாராயம் விற்பனை: ஒருவர் கைது

DIN

கூடலூரை அடுத்த ஓவேலியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
நியூஹோப் காவல் நிலைய எல்லையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கூடலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிசங்கருக்குத் தகவல் கிடைத்தது. கூடலூர் ஆய்வாளர் சக்திவேல் தலைமையில் நியூஹோப் உதவி ஆய்வாளர் ராஜேஷ், குற்றப் பிரிவு காவலர் பிரமோத் ஆகியோர் மரப்பாலம் பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு,  5 லிட்டர் கள்ளச்சாராயம்,  அதற்கான மூலப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சந்திரமோகன் (46) என்பவர் கைது செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT