நீலகிரி

ஓணம் பண்டிகை: நீலகிரியில் உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

DIN

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
செப்டம்பர் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள ஓணம் பண்டிகையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த நாளில் மாவட்டக் கருவூலம், சார்நிலைக் கருவூலங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் குறிப்பிட்ட அலுவலங்கள் மட்டும்  சில  பணியாளர்களுடன் செயல்படும். மேற்கண்ட விடுமுறையை ஈடுசெய்ய செப்டம்பர் 9-ஆம் தேதி (சனிக்கிழமை) நீலகிரி  மாவட்டத்துக்கு பணி நாளாக அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலநிற மேகமே... சதா!

பாலிவுட் சுந்தரி..!

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT