உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் மற்றும் உதகை ஒய்எம்சிஏ அமைப்பு சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் மற்றும் உதகை ஒய்எம்சிஏ அமைப்புடன் இணைந்து ஒய்எம்சிஏ நூலகத்தில் சனிக்கிழமை நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மலைச்சாரல் தமிழ் கவிஞர்கள் சார்பில் கவிதாஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மலைச்சாரல் கவிமன்ற மூத்த கவிஞர் புலவர் சோலூர் கணேசன், ஒய்எம்சிஏ தலைவர் தனசிங் இஸ்ரேல், செயலர் மேக்ஸ் வில்லியர்டு ஜெயப்பிரகாஷ், கவிஞர் பாலகிருஷ்ணன், புலவர் கமலம், உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்கத் தலைவர் ஜனார்த்தனம், செயலர் ஜேபி ஆகியோருடன் ஒய்எம்சிஏ உறுப்பினர்களும் பங்கேற்றனர்.