நீலகிரி

கான்கிரீட் கூரை சேதம்: நூலகக் கட்டடத்தில் மழைநீர் கசிவு

DIN

கூடலூர் நூலகக் கட்டடத்தின் கான்கிரீட் கூரை சேதமடைந்துள்ளதால் நூலகத்துக்குள் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள நூலகத்தின் கான்கிரீட் கூரை சேதமடைந்துள்ளது. இதனால் தற்போது பெய்யும் தொடர் மழையால் நூலகத்துக்குள் மழைநீர் கசிந்து வருகிறது.
தொடர்ந்து பலத்த மழை பெய்யும்போது நூலகம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதே நிலை நீடித்தால் நூலகத்தில் உள்ள அரிய, பழமையான புத்தகங்கள் சிதைந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் நூலகக் கட்டடத்தை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வாசகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT