நீலகிரி

தேவர்சோலை பகுதியில் புலி தாக்கி பசு மாடு பலி

DIN

கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பகுதியில் புலி தாக்கியதில் பசு மாடு பலியானது.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை 9ஆவது மைல் பகுதியில் வசிக்கும் அஷரஃப் என்பவர் தனது பசு மாட்டை திங்கள்கிழமை வழக்கம்போல மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். மாலையில் பசு வீடு திரும்பாத காரணத்தால் பல இடங்களிலும் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. 
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மேய்ச்சலுக்கு விட்ட பகுதி தேயிலைத் தோட்டத்தில் தேடியபோது பசு இறந்து கிடந்தது தெரியவந்தது. புலி தாக்கி மாமிசத்தை சாப்பிட்டதற்கான அடையாளங்கள் அங்கு காணப்பட்டன.
புலியின் கால் தடங்களும் அதே பகுதியில் பதிவாகியுள்ளதை உறுதி செய்துள்ளனர். அந்த பகுதியை வனத் துறையினர் ஆய்வு செய்துவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT